Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நண்பனின் 50 இலட்சம் ரூபா பணத்தை திருடி தப்பியோடிய நபர்!

நண்பனின் 50 இலட்சம் ரூபா பணத்தை திருடி தப்பியோடிய நபர்!

1 minutes read

வர்த்தகரான தனது நண்பன் உறக்கத்தில் இருக்கும்போது அவரது பையில் இருந்த 50  இலட்சம் ரூபா பணத்தை திருடி தப்பிச்சென்ற  நபர் ஒருவர் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த திருட்டு சம்பவம் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பணத்தை திருடி தப்பிச் சென்றவர் கொஸ்கொடை பிரதேசத்தை சேர்ந்தவராவார். இவர் பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய நண்பர்  என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக சென்றுள்ள நிலையில் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் அறையில் தங்கியிருந்து மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில் ,பாதிக்கப்பட்டவர் அதிகளவில் மதுபானம் அருந்தி இருந்ததால் அவர் சிறிது நேரத்தில் போதையில் உறங்கியுள்ளார்.

இதன்போது சந்தேக நபர் , உறக்கத்தில் இருந்த தனது நண்பனின் பையில் இருந்த 50  இலட்சம் ரூபா பணத்தை திருடி அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More