Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 9 பேர் கைது!

சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 9 பேர் கைது!

0 minutes read

மாமுனை,  நாகர் கோவில் கடற்பகுதிகளில் , சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட ஒன்பது பேரை  வெற்றிலைக்கேணி கடற்படையினர்  கைது செய்ததுடன் மூன்று டிங்கி படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்  போது,  இவர்கள் கைதானதுடன்  3  டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும்  22 வயது முதல் 49 வயது வரையிலானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More