கொழும்பு, கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேர வாவிக்கு அருகாமையில் ஆணின் சடலமொன்று அடையாளம் காணப்படாத நிலையில் நேற்று (06) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் யார் என இதுவரை இனங்காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை; அந்த நபர் 45 – 50 வயதுடையவராக இருக்கலாம்; அவர் 5 அடி 6 அங்குல உயரமுடையவர்; நீல நிற சாரம் அணிந்திருக்கிறார் என பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.
இந்த சடலம் தொடர்பாக கொம்பனித் தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.