Tuesday, May 21, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் போதைப்பொருளுடன் கைது!

பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் போதைப்பொருளுடன் கைது!

1 minutes read

பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் ஒருவர் ரம்புக்கணை மாகொல்லவத்த சந்தி பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன்  கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் 2022 ஆம் ஆண்டு அஹுங்கல்ல பிரதேசத்தில்  ஹோட்டலுக்கு அருகில் வைத்து இருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவராவார்.

இதேவேளை, 2017ஆம் ஆண்டு எம்பிலிப்பிட்டிய கொடக்காவெல பிரதேசத்தில் விலை மதிப்பற்ற மாணிக்கக் கற்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மற்றும் ராகம பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு 78 இலட்சம் ரூபா பெறுமதியான வேன்  ஒன்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பிலும்  சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தாகவும் விசேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபரிடம் இருந்து 820 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு,  மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபரை ரம்புக்கணை பொலிஸாரிடம்  விசேட அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More