மெக்ஸிக்கோவிற்கு சுற்றுலாப்பயணத்தை மேற்கொள்ளும் சுற்றுலாப்பயணிகள் கடற்கரைகளுக்கு செல்ல அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் அதிகம்விரும்பிச்செல்லும் மெக்ஸிக்கோவின் டபஸ்கோவில் உள்ள நான்கு கடற்கரைகளில் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு எண்ணெய் திட்டுக்கள் காணப்படுகின்றன.
இதனால் அங்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தோல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாகவே குறித்த கடற்கரைகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதித்து மூடப்பட்டுள்ளது.
மூடப்பட்டுள்ள கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதுடன் எண்ணெய் திட்டுக்கள் இவ்வாறு காணப்படக்காரணம்யாது? என்பது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.