கொரோனா வைரஸ் பாதிப்பு கோடைக்காலம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு தழுவியஅளவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார். அடுத்த 15 நாட்களுக்கு பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
10 பேருக்கு மேல் கூட்டமாக சேர வேண்டாம் எனவும், உணவகங்கள், பார்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தினார். கொரோனா நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க தமது அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக டிரம்ப் மேலும் தெரிவித்தார். அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு 91 பேர் உயிரிழந்த நிலையில், 4 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்