Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ஏப்ரல் இறுதிக்குள் மருந்து தயார்: அமெரிக்கா ஜனாதிபதி

ஏப்ரல் இறுதிக்குள் மருந்து தயார்: அமெரிக்கா ஜனாதிபதி

1 minutes read
சீனாவில் பல ஆயிரம் பேரை உயிரிழப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அமெரிக்காவிலுள்ள 50 மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவி விட்டது. மேலும் அமெரிக்காவில் மட்டும் கொரோன வைரசுக்கு 155  பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்கர்கள் கடுமையான பயத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று வோஷிங்டனில் செய்தியாளர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் பேட்டியளித்த போது கூறியதாவது:
நாட்டின் 50 மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் கண்ணுக்கு தெரியாத எதிரி, அதனை அழித்தே தீருவோம். கொரோனா வைரஸை அழிக்கும் மருந்தை கண்டுபிடிக்கும் சோதனையை துவங்கியுள்ளோம்.
மருந்து மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். அடுத்த மாதம் இறுதிக்குள் கொரோனா வைரசுக்கு எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விடும். கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்து கொள்ள அமெரிக்கர்களுக்கு 15 அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.
வணக்கம் லண்டனுக்காக – ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More