அமெரிக்காவின் Pfizer நிறுவனத்துடன் இணைந்து, கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் ஜெர்மனி நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் லட்சக் கணக்கானோருக்கு தடுப்பு மருந்தை விநியோகிக்க முடியும் என தெரிவித்துள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த பயான்டெக் (BioNTech) நிறுவனம், அமெரிக்காவின் Pfizer நிறுவனமும் இணைந்து BNT162 என்ற தடுப்பு மருந்தை தயாரித்து வருகின்றன. இதில் ஜெர்மனியில் மனிதர்கள் மீதான பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 23ஆம் தொடங்கிய சோதனையில், இதுவரை 22 பேருக்கு பரிசோதனை அடிப்படையில் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதுபோல, தாங்களாக முன்வந்த 200 பேருக்கு 1 மைக்ரோகிராம் முதல் 100 மைக்ரோகிராம் வரை தடுப்பு மருந்து கொடுத்து பரிசோதிக்கப்பட உள்ளது. இதுவரை சோதனை முடிவுகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், அமெரிக்காவிலும் தடுப்பு மருந்து அடுத்த வாரத் தொடக்கத்தில் பரிசோதிக்கப்பட உள்ளது. இந்த தடுப்பு மருந்து, அவசர பயன்பாடுகளுக்காக செப்டம்பர்-டிசம்பர் காலகட்டத்தில் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.