Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா 30 ஆண்டுகளுக்கு பின் போர்க்கப்பல்களை செலுத்தி போர்த்திறனை சோதித்த அமெரிக்கா!!

30 ஆண்டுகளுக்கு பின் போர்க்கப்பல்களை செலுத்தி போர்த்திறனை சோதித்த அமெரிக்கா!!

1 minutes read

ஆர்ட்டிக் கடலில் ரஷ்யா தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது என கடந்த ஆண்டு முதலே கூறி வரும் அமெரிக்கா, இப்போது தனது 3 நாசகாரி போர்க்கப்பல்களை அதில் செலுத்தி தனது போர்த்திறனை சோதித்துள்ளது.

கடற்வழி பயண சுதந்திரத்தை மதிப்பீடு செய்யவும், கூட்டு நாடுகளுடன் தடையின்றி இணைந்து செயலாற்றுவதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்யா மற்றும் நார்வேக்கு இடையே இருக்கும் ஆர்ட்டிக் பகுதியான பேரன்ட்ஸ் கடலில் (Barents Sea) 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் டொனால்டு குக், போர்ட்டர், ரூஸ்வெல்ட் ஆகிய போர்க்கப்பல்கள் பயணித்தன.

இருப்பினும்  ரஷ்யா நோர்வே இடையே, நாட்டோவின் வான்பகுதியில் அண்மை காலமாக உருவாகி உள்ள பதற்றமும் அமெரிக்க கப்பல்கள் பயணிக்க காரணமாக கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More