0
கொரோனா பாதிப்பால் பல நாடுகள் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது.
அத்துடன் இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்திய ஊரடங்கை தளர்த்தியுள்ளன.
இந்நிலையில் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus), ஊரடங்கை உலக நாடுகள் அவசர கதியில் விலக்கிக் கொள்ள கூடாதென்றும், அப்படி விலக்கினால் கொரோனா பாதிப்பு உடனடியாக அதிகரித்து விடும் என்றும் எச்சரித்துள்ளார்.