கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கரை விடுவித்ததற்காக ஈரானுக்கு நன்றி தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், அந்நாட்டுடன் ஒப்பந்தம் சாத்தியம் என்பதையே இது காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய மைக்கேல் ஒயிட் என்பவரை, ஈரானில் வைத்து கைது செய்த அந்நாட்டு அரசு 2 ஆண்டுகள் கழித்து, நேற்று விடுவித்தது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், தாம் பதவியேற்ற பிறகு, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 40 அமெரிக்கர்களை மீட்டு தாயகம் கொண்டுவந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே அமெரிக்காவும், பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ள ஈரானியர்களை விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜாவேத் ஜாஃப்ரி வலியுறுத்தியுள்ளார். ஈரானை சேர்ந்த விஞ்ஞானி சிரோஸ் அஸ்கரி, கடந்த புதன்கிழமை அமெரிக்காவால் விடுவிக்கப்பட்டதற்கும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.