அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 8 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், நோய்தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மிகவும் மோசமான காலத்தை கடந்துவிட்டதாக செய்தியாளர்களிடம் கூறிய அவர், பொருளாதார வலிமை மிக்க நாடான அமெரிக்காவிற்கு கொடூரமான தொற்று நோயுடன் போராடும் ஆற்றலை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழக்கும் சூழ்நிலை குறித்து பதிலளித்த டிரம்ப் கொடிய நோய்த் தொற்று பாதிப்பில் இருந்து அமெரிக்கா மீண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.