பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்திற்குள் இதுவரை இல்லாத அளவுக்கு 34,918 கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி பிரேசிலில் 920,000க்கும் அதிகமான கொவிட்-19 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
மேலும் அமெரிக்காவுக்கு அடுத்து மோசமாக பாதிக்கப்பட்ட நாடாகவும் அது உள்ளது.
அதேபோன்று கடந்த செவ்வாய்க்கிழமை மேலும் 1,300 பேர் வரை உயிரிழந்திருக்கும் நிலையில் அந்நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 45,241 ஆக அதிகரித்துள்ளது.
நோய்த் தொற்று வேகம் குறைவடைவதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படாத நிலையில் இந்த வார இறுதியாகும்போது பிரேசிலில் நோய்த் தொற்று எண்ணிக்கை ஒரு மில்லியனாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மையப்புள்ளியாக பிரேசில் மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் அந்நாட்டில் குறைவான சோதனைகளே நடத்தப்படும் நிலையில் உண்மையான பாதிப்பு எண்ணிக்கை கூறப்படுவதை விடவும் பலமடங்காக இருக்கலாம் என்று வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.