அமெரிக்க அதிபர்தேர்தல் கருத்துக்கணிப்பில் டிரம்பிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து அமெரிக்காவின் கின்னிபியாக் பல்கலைக்கழகம் சார்பில் தேசிய அளவில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதில் தற்போது தேர்தல் நடைபெற்றால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, டிரம்புக்கு ஆதரவாக 41 சதவீதம் பேரும் அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவாக 49 சதவீதம் பேரும் வாக்களித்தனர்.
இதன் மூலம் டிரம்பை விட ஜோ பிடன் 8 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.