அமெரிக்க பொருளாதாரத் தடைகளை மீறி ஈரானின் பெட்ரோலியம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்களை ஏற்றுமதி செய்ய உதவிய, 11 வெளிநாட்டு நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனாவை தளமாகக் கொண்ட ஆறு நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடைகளை விதித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானின் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழில் தொடர்பான பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கு ஐந்து நிறுவனங்கள் மீதும், கறுப்புப்பட்டியலில் உள்ள மூன்று நிறுவன அதிகாரிகள் மீதும் வெளியுறவுத்துறை பொருளாதாரத் தடைகளை விதித்தது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈரானிய ஆட்சிக்கு பயங்கரவாதம் மற்றும் பிற ஸ்திரமின்மைக்குரிய நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை மறுப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை இன்று எங்கள் நடவடிக்கைகள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை எந்தவொரு அமெரிக்க சொத்துக்களையும் கறுப்புப்பட்டியலில் முடக்கியது மற்றும் பொதுவாக அமெரிக்கர்களை அவர்களுடன் கையாள்வதைத் தடுக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பெட்ரோடெக் எஃப்,சட்.இ மற்றும் ட்ரையோ எனர்ஜி டிஎம்சிசி, ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட ஜிங்கோ டெக்னாலஜி கோ லிமிடெட் மற்றும் டைனாபெக்ஸ் எனர்ஜி லிமிடெட் மற்றும் சீனாவை தளமாகக் கொண்ட டின்ரின் லிமிடெட் ஆகிய நிறுவனங்களே கறுப்புப்பட்டியலில் பட்டியலிட்டுள்ளன.