வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்தில் பைசர் கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு வழங்கும் பணி தொடங்கி உள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் நேற்று பலி எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது.
தற்போது அமெரிக்காவில் ஒரு கோடியே 65 லட்சம் பேர் பாதித்துள்ளனர். 3 லட்சத்து 500 பேர் பலியாகி உள்ளனர். 2வது இடத்தில் உள்ள இந்தியாவில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி உள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, இந்தியாவில் 99 லட்சத்து 6,165 பேர் பாதித்துள்ளனர். ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 709 பேர் பலியாகி உள்ளனர்.