Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா டெக்சாஸில் யூத ஆலயத்தில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் விடுவிப்பு !

டெக்சாஸில் யூத ஆலயத்தில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் விடுவிப்பு !

1 minutes read

அமெரிக்காவின்  டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள யூத ஆலயத்தில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த நான்கு பேர் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆராதனையில் கலந்துகொண்டவர்களை பணயக் கைதிகளாக்கி சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக ஒருவர் பதட்டமான நிலையை ஏற்படுத்தி வருகின்றார்.

பிணைப் பிடித்தவர் ஆயுதங்களை வைத்திருப்பதாக நம்பப்படுகிற அதேநேரம் சில இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க இராணுவ அதிகாரிகளைத் தாக்கி சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் 2010 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய நரம்பியல் விஞ்ஞானியை விடுவிக்க கோரியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிணை பிடித்தவர் தன்னைச் சிறையில் உள்ள கைதி ஒருவரின் சகோதரர் என்றும் தனது சகோதரர் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கோரியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More