சூர்யா படத்தில் மைக்மோகன் வில்லனாக நடிக்கிறார். 1970 மற்றும் 80 களில் மைக்மோகன் தமிழில் முன்னணி கதாநாயகனாக இருந்தார். தற்போது கன்னட படங்களில் குணசித்திர வேடங்களில் நடிக்க வருகிறார். நீண்ட இடை வெளிக்கு பிறகு தமிழில் தற்போது வில்லனாக வருகிறார்.
சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்துக்கு அவரை வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு பூச்சாண்டி என பெயர் வைத்துள்ளதாக பேசப்படுகிறது. ஏற்கனவே சரோஜா, மங்காத்தா, பிரியாணி உள்ளிட்ட ஹிட் படங்களை வெங்கட் பிரபு கொடுத்துள்ளதால் இந்த படத்துக்கும் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பிரியாணியில் முன்னாள் கதாநாயகன் ராம்கியை நடிக்க வைத்தது போல் பூச்சாண்டியில் மைக் மோகளை வில்லனாக்கியுள்ளார். சூர்யா தற்போது அஞ்சான் படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கிறார். இந்த படம் முடிந்ததும் பூச்சாண்டி பட வேலைகள் துவங்குகின்றன.