சென்னை: தமிழகத்தில் சட்டசபைக்கான ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் முக்கிய அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (மே 2) நடைபெற்று வருகிறது. அதிமுக தரப்பில் அமைச்சர்கள் பலருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் ஓட்டு எண்ணிக்கையில், அமைச்சர்கள் காமராஜ், ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.