Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “அம்மாவின் கழுத்தை நெரித்து நானே கொலை செய்தேன்!”- 16 வயது மகன் வாக்குமூலம்

“அம்மாவின் கழுத்தை நெரித்து நானே கொலை செய்தேன்!”- 16 வயது மகன் வாக்குமூலம்

1 minutes read
“எனது அம்மாவின் கழுத்தை நெரித்து அவரை நானே படுகொலை செய்தேன்” – என்று கைதான 16 வயது மகன் விசாரணைகளின்போது வாக்குமூலம் வழங்கியுள்ளார் என யாழ். தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
தெல்லிப்பழை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றில் இருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

அந்தப் பகுதியைச் சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் (வயது 37) எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் தனது  இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் அவரது கணவன் வெளிநாட்டில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தாயும் மகனும் மட்டுமே இருந்தனர்.

மறுநாள் தாய் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டார். பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன் வீட்டில் இருந்து காணாமல்போயிருந்ததுடன் வீட்டின் சுவர்களில் இரத்தக்கறைகளும் காணப்பட்டன.

அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த வேளை காணாமல்போன 16 வயது சிறுவனைப் பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தானே தாயின் கழுத்தை நெரித்துப் படுகொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவன் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை , மேற்படி சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அயலவர்கள் தெரிவித்தனர். சிறுவன் கைபேசி விளையாட்டுக்களுக்கு (மொபைல் கேம்ஸ்) அடிமையானவர் எனவும், அதனால் சிறுவன் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தார் எனவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More