இலங்கையில் போதைப் பொருள் மற்றும் மதுபானங்களை பயன்படுத்தும் பெண்களில் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறும் போது நாகரீக மாற்றத்தாலும் நகரவாழ்க்கை முறைகளாலும் பல பெண்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுகின்றனர். போதைப் பொருள்களை எடுத்துக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது வேதனை அளிக்க கூடிய ஒரு விசயம். கிராம சேவகர்கள் போதைப் பொருள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என கூறினார்.