0
யாழ்ப்பாணம், தொண்டமானாறு கடல் நீரேரியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காலைவேளையில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் சடலம் மிதப்பது தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியிருந்தனர்.
இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்ட நபரின் சடலத்தை மீட்கப்பட்டுள்ளனர்
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 80 வயது மதிக்கத்தக்க முதியவராவார்.