பெரும்பாலானோர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் உடல் பருமனைக் குறைக்க ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் உதவுவதாக கூறப்படுகிறது.
இதனால் இப்பொருள் இன்று மக்களிடையே பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆப்பிள் சீடர் வினிகர் சமையலில் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக ஆப்பிள் சீடர் வினிகர் மருத்துவ குணம் வாய்ந்தது.
இதனால் இது டைப்-2 சர்க்கரை நோய், எக்ஸிமா மற்றும் உயர் கொலஸ்ட்ரால் போன்ற அனைத்து வகையான நோய்களை சரிசெய்வதற்கு உதவுகிறது.
பெரும்பாலான மக்கள் ஆப்பிள் சீடர் வினிகரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பார்கள்.
ஆனால் இது அமிலத்தன்மை வாய்ந்தது என்பதால் வெறும் வயிற்றில் குடிப்பது அவ்வளவு நல்லதல்ல.
அப்படியானால் எப்போது ஆப்பிள் சீடர் வினிகரைக் குடிக்கலாம் என்று நீங்கள் கேட்கலாம்.
ஆப்பிள் சீடர் வினிகரை வெறும வயிற்றில் குடிப்பதை விட, இரவு நேரத்தில் குடித்தால் அது பல நன்மைகளை வழங்கும்.
இப்போது ஆப்பிள் சீடர் வினிகரை இரவு நேரத்தில் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்பதையும், அதை எப்படி குடிக்கலாம் என்பதையும் காண்போம்.
நன்றி boldsky