0
கற்பிட்டி, கிம்புல்பொக்க கடற்கரை பகுதியில் வைத்து 20 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் இருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களின் படகும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 5.7 கிலோ கிராம் நிறையுடை தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.