பிரபல ஒளிப்பதிவாளரும், மதுரை வீரன் படத்தின் இயக்குனருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் இந்த படம் 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய திரைப்படம், இது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் படம் லிசா இப்படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் ,கடந்த தினம் இடம்பெற்ற படப்பிடிப்பின் போது தோசைக் கல்லை தூக்கி எறிந்து இயக்குநரின் நெற்றியை காயப்படுத்தியிருக்கிறார் அஞ்சலி.
இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், சமீபத்தில் சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு காட்சிப்படுத்தியது. அந்த காட்சியில் அஞ்சலி, தோசைக்கல்லை கெமராவை நோக்கி வீச வேண்டும். ஆனால், அஞ்சலி வீசிய தோசைக்கல் நேராக இயக்குநர் ராஜூ விஸ்வநாத்தின் நெற்றியை தாக்கி ரத்தக் காயத்தை ஏற்படுத்தியது.
இதில் அவரது கண் அருகே புருவம் கிழிந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இயக்குநருக்கு நெற்றியில் தையல் போடப்பட்டது.