பங்களாதேஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்க மீண்டும் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் நஜ்முல்ஹசன் இதனை உறுதிசெய்துள்ளார்.
இலங்கை பங்களாதேஸ் அணிகளிற்கு இடையிலான ஒரு நாள் தொடரிற்கு பின்னர் ஹதுருசிங்க பங்களாதேஸ் அணியின் பயிற்றுவிப்பாளராகலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொடர் முடிவடைந்ததும் புதிய பயிற்றுவிப்பாளராக தெரிவுசெய்யப்படக்கூடியவர்களில் ஹத்துருசிங்கவும் ஒருவராக காணப்படுவார் எனவும் நஜ்முல்ஹசன் தெரிவித்துள்ளார்.