வானிலை மாற்றம் காரணமாக வங்காள விரிகுடா பகுதியில் சூறாவளி ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் வங்காளவிரிகுடாவை சூழவுள்ள கடற்பகுதிகளில் கடற்பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
குறித்த சூறாவளி இன்று இரவு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணத்தால் வங்காள விரிகுடா பகுதியில் அடிக்கடி மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.