உடல் நலக் குறைவு காரணமாக இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்.
84 வயதான முகர்ஜி கடந்த ஓகஸ்ட்10 ஆம் திகதி மூளை அறுவை சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் அவரது உடல் நிலையில் பெரிய அளவு முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லையென மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவரது மறைவை அவரது மகன் டுவிட்டர் பக்கத்தின் ஊடாக உறுதி செய்துள்ளார்.