0
எல்லோரையும்போல
மழைச்சாரல் ரசிக்க
இசையைக் கேட்டபடி
தேநீர்க் கோப்பையைப்
பற்றிக்கொள்கிறேன்!
ஓட்டைக் கூரையால்
ஒழுகி வழியும் நீரை
ஏந்திக் குடித்துப்
பசியாறக்கூட
பாத்திரமின்றித்
திண்டாடும் ஏழை,
தன் குடும்பத்தோடு
என் தேநீர்க்
கோப்பைக்குள் இருந்து
எட்டிப் பார்க்கிறான்!
| கிரிஷாந்த்ராஜ்