இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் முன்கள பணியாளர்களான பொலிஸாரும் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் புதிதாக 159 பொலிஸாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொலிஸாரின் மொத்த எண்ணிக்கை 21,311 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 17,295 பொலிஸார் குணமடைந்துள்ள நிலையில், இன்று வரை மொத்தம் 223 பொலிஸார் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தற்போது மகாராஷ்டிரா காவல் துறையில் 3,655 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்