சீனாவிடம் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியைக் காக்கக் கிழக்கு லடாக்கில் நிர்பய் ஏவுகணைகளை இந்திய இராணுவம் நிறுத்தியுள்ளது.
கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் முன்பிருந்த நிலையைத் தாண்டிச் சீன இராணுவம் தனது படையினரை நிறுத்தி வைத்துள்ளதால், பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், ஆயிரம் கிலோமீற்றர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் நிர்பய் ஏவுகணையை இந்திய இராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குக் கொண்டுசென்றுள்ளது.
இவ்வகை ஏவுகணைகளின் ஏழாம் கட்டச் சோதனையை எதிர்வரும் மாதத்தில் நடத்த இராணுவமும் கடற்படையும் திட்டமிட்டுள்ளன.
எல்லையைக் காப்பதற்காக அதை முன்கூட்டியே படையில் இணைக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு ஒப்புதல் அளித்துள்ளது.