மகாராஷ்ட்ராவில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 16 பேர் சோலாப்பூரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக நகரங்களின் வீதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் சோலாப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள்தான் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மும்பை புனே உள்ளிட்ட நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.