இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதன்படி நேற்று ஒரேநாளில் 36 ஆயிரத்து 838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 79 இலட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது.
அத்துடன் 505 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 19 ஆயிரத்தை கடந்துள்ளது.
மேலும் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 71 இலட்சத்து 98 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், 6 இலட்சத்து 27 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.