கொழும்பு- முகத்துவாரத்தில் மேலும் 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முகத்துவாரம் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பில் இன்று மாத்திரம் 400 பி.சி.ஆர்.பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்த 23 வயது இளைஞர் இப்பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 12 ஆயிரத்து 970 பேரில் 5 ஆயிரத்து 217 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு 467 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதுடன் கொரோனா தொற்றினால் இதுவரை 30பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.