மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியை எவராலும் அழிக்க முடியாதென முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் குமாரசாமி மேலும் கூறியுள்ளதாவது, “கர்நாடக சட்டசபைக்கு 2023ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) தனித்து போட்டியிடும்.
எந்த கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம். தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளின் நோக்கம் என்ன என்பது எனக்கு தெரியும்.
இந்த 2 கட்சிகளும், ஜனதா தளம் (எஸ்) கட்சி பலம் இழந்துவிட்டதாக தவறான பிரசாரம் செய்து வருகின்றன. ஜனதா தளம் (எஸ்) கட்சியை எவராலும் அழிக்க முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.