Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மறைந்த நடிகரே மறுபிறவி எடுத்திருப்பதாக ரசிகர்கள் நம்பிக்கை

மறைந்த நடிகரே மறுபிறவி எடுத்திருப்பதாக ரசிகர்கள் நம்பிக்கை

1 minutes read

மறைந்த தமிழ் நடிகரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் மறைந்த நடிகரே மறுபிறவி எடுத்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

சந்தானம் நடித்த ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் டாக்டர் சேதுராமன். பிரபல தோல் நோய் நிபுணராக இவர் ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் வெற்றிக்குப் பின்னர் ’வாலிபராஜா’ ’சக்க போடு போடு ராஜா’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்

இந்த நிலையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்திய இரண்டே நாட்களில் திடீரென இதயக் கோளாறு காரணமாக உயிரிழந்தார். சேதுவின் மறைவு அவரது நெருங்கிய நண்பரான நடிகர் சந்தானம் உள்பட பல திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்தது. 35 வயதில் ஒரு நல்ல டாக்டர் மற்றும் நடிகர் மறைந்தது திரையுலகிற்கு மட்டுமின்றி மருத்துவ உலகிற்கும் மிகப்பெரிய இழப்பாக கருதப்பட்டது

இந்த நிலையில் சேது மரணமடைந்தபோது அவரது மனைவி உமையாள் கர்ப்பமாக இருந்தார். இதனை அடுத்து அவருக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவல் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியானதும் ’குட்டிசேது’ பிறந்துவிட்டதாகவும், சேதுவே மறுபிறவி எடுத்துள்ளதாகவும் ரசிகர்கள் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More