சமீபத்தில் வெளியான சக்ரா படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது உருவாகி வரும் படத்திற்காக 50 அடி உயரத்தில் இருந்து குதிக்க இருக்கிறார்.விஷால் நடிப்பில் வெளியான ‘சக்ரா’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தை அடுத்து அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார்.
எனிமி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. துபாயில் நடக்கும் படப்பிடிப்பில், 50 அடி உயரத்தில் இருந்து விஷால் குதிப்பதற்கு முன்பான புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.