Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் திருமணத்துக்கு தயாரா

திருமணத்துக்கு தயாரா

2 minutes read

நீங்கள் திருமண வயதை அடைந்து வாழ்க்­கைத்துணை தேடுபவராக இருந்தால், ஆண் என்­றால் பெண் பார்க்க சென்றிருப்பீர்கள்.

பெண்ணை பார்த்திருப்பீர்கள். ஒருசில முறை சந்­தித்து பேசியிருப்பீர்கள். ஆனாலும் ‘இந்த பெண் தன்னோடு பொருந்தி வாழ்வாரா?’ என்ற சந்தே­கமோ, தயக்கமோ உங்களுக்கு இருக்கலாம்.

அது­போல் உங்களைப் பார்த்த, பேசிய, பேசிக்­கொண்டி­ருக்கிற அந்த பெண்ணுக்கும் சில தயக்­கங்கள் ஏற்பட்டு, முடிவெடுக்க அவரும் தடு­மாறிக்­கொண்டிருக்கலாம்.

அப்படிப்பட்ட சூழலில் நீங்கள் இருந்தால், நீங்கள் திருமணத்தில் ஒரு தெளிவான முடிவுக்கு வர கீழ்கண்ட கேள்விகள் உதவும்.

இருவரும் முழுமையாக ஒருவரை ஒருவர் நம்பு­கிறீர்களா? தன்னலம், சுயநலம், தனிப்பட்ட விருப்பு – வெறுப்புகளில் இருந்து விடுபட்டு, இரு­வரும் ஒருங்கிணைந்து விட்டுக்கொடுத்து வாழ முடியும் என்று நினைக்கிறீர்களா? மாறுபட்ட உணர்வுகளும், செயல்­களும் இரு­வரிடமுமே இருக்கும்.

இருவரின் மகிழ்ச்சிக்காக அவை­களில் இருந்து விடுபட்டு வெளியே வந்து ஒன்றிணைந்து வாழ முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு ஏற்படு­கிறதா? அனைத்துவிதமான சுகங்­களிலும், துக்கங்களிலும் மனதொத்து வாழ முடியும் என்று நம்புகிறீர்களா? வேலை பார்ப்பது அல்லது வேலையில் இருந்து வில­குவது, இரண்டிலும் ஒத்த கருத்தை மேற்கொள்ள முடியும் என்று கருதுகிறீர்களா? குடும்ப செலவு­கள் உள்பட வீட்டு பொருளா­தார சூழ்நிலைகள் அனைத்திலும் ஒன்றுபட்டு முடிவெடுக்கும் அதி­காரம் இருவருக்குமே உண்டு என்ற கருத்தில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?

இருவரும் பிரிந்திருக்கும்போது பிரிவு வாட்டுகி­றதா? எப்போது பார்ப்போம் என்ற ஏக்கம் தோன்று­கிறதா? எந்த பிரச்சினை ஏற்பட்டாலும், பேசி தீர்த்­துக்­கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளதா? பாராட்­டும் குணமும் மன்னிக்கும் குணமும் இருக்­கி­றதா? இருவரது குடும்பத்தினர் மீதும் வேறு­பாடின்றி அன்பு செலுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதா? ஒருபோதும் எந்த வகையிலும் வாழ்க்­கைக்­குள் மூன்றாம் நபர் ஒருவரை அனுமதிக்க மாட்டேன் என்று உறுதி கூற முடியுமா? மேற்கண்ட கேள்வி­களுக்­கெல்லாம் ‘ஆம்’ என்பது உங்கள் இருவரின் பதிலாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் திருமணத்தில் இணையும் மணவாழ்க்கை சிறக்கும். அல்லது ‘ஆம்’ என்று சொல்லும் நிலைக்கு மனம் பக்குவம் அடையும் வரை காத்திருங்கள். யாரோடு உங்கள் மனம் ‘ஆம்’ சொல்லுமோ அவரோடு வாழ்க்கையில் இணையுங்கள்.

நன்றி | வீரகேசரி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More