இலங்கையின் மூத்த வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகக் கலைஞர் கலாபூஷணம் கே.சந்திரசேகரன் மதுரையில் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
அன்னார் நீண்ட காலமாக இலங்கை தமிழ் நாடகத்துறைக்கு அளப்பரிய பங்களிப்பு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார்.
தமிழ்நாட்டு திரைக்கலைஞர்கள், நாடக கலைஞர்களின் தொடர்பும் ஆதரவும் பெற்ற இவர், அண்மையில் தமிழ்நாட்டின் மதுரை சென்று வசித்து வந்த நிலையில் காலமாகியுள்ளார்.