Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் உழைப்பாளருக்கு வாழ்த்து | புலவர் சிவநாதன்

உழைப்பாளருக்கு வாழ்த்து | புலவர் சிவநாதன்

0 minutes read

கல்பிளந்திடும் கரங்கள் தொடக்கம்
கணனி தோய்ந்திடும் விரல்கள் வரைக்கும்
சொல் சுரந்திடும் உளங்கள் தொடக்கம்
சுரம் வழங்கிடும் குரல்கள் வரைக்கும்
‘தில்’ நிறைந்தவர் திறன்கள் தொடக்கம்
திண்மை கொண்டவர் தியானம் வரைக்கும்
நல் வளங்களும் பரந்து நிறைக்க
நாட்டு மக்களின் வாழ்வு சிறக்க
வல்ல சக்தியின் தாள்கள் வணங்கி
வாழ்த்தி நின்றனம் ‘மே’ த் திருநாளிலே!

பிறர் உழைப்பினைப் பிடுங்கிப் பிழைத்திடும்
அறமில் உலகு அடியோடழியவும்
திறன் உணர்ந்தவர் தகைய தலைமையிற்
தேச அரசுகள் துறைகள் துலங்கவும்
உறவில் உண்மையும் உழைப்பின் மேன்மையும்
உரிமைத் தன்மையும் உயிர்த்து ஓங்கவும்
இறைமை கொண்ட இனங்கள் தங்களின்
இனிய வரலாற்றுப் பெருமை கொள்ளவும்
இதயம் உந்திட இன் நன்னாளிலே
எமது தமிழவை வாழ்த்து நல்கிற்றே!

புலவர் சிவநாதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More