0
கண்களைக் கொடுத்து
ஒளியைப் பரிசளித்தாய்!
ஆகையால்…
கரைந்துபோன பின்பும்
நீயே காண்கிறாய்…!
அவனதோ அவளதோ
கண்களில் பூக்கையில்…
நீ
அவனதும் ‘கண்மணி’
அவளதும் ‘கண்மணி’
நீரையோ தீயையோ
இதுவரை காணார்…
அவற்றைக் காண்கையில்
உன்னையும் காண்பார்…!
நீயும் காண்பாய்..!
நிலவையோ சுடரையோ
இதுவரை காணார்….
அவற்றைக் காண்கையில்
உன்னையும் காண்பார்..!
நீயும் காண்பாய்…!
அவன் – அவனேயான அவனையும்
அவள் – அவளேயான அவளையும்
காண்கையில்…
உன்னையும் காண்பான்!
உன்னையும் காண்பாள்!
நீயும் காண்பாய்!
ஒரு சோடிக் கண்களால்,
ஓராயிரம் உலகைப் பரிசளித்து…
அவனதோ அவளதோ
உலகைப் படைத்திருக்கிறாய்…
மகளே!
இப்போதுதான்…
இப்போது மட்டுந்தான்…
கடவுள் உலகத்தைப் படைக்கவில்லை!
செ.சுதர்சன்
30/10/2023
(கலைப்பீட நிறைவு வருட மாணவி அமரர் N. நித்தியவதனி தமது கண்களைத் தானம் செய்தமை குறித்து எழுதியது)