டாக்டர் பரமநாதன் விக்கினேஸ்வரா நினைவாக தீபச்செல்வன் நூல்களை கிழக்கு மாகாண நூலகங்களுக்கு அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் ஒன்றாக பேத்தாலை நூலகத்திற்கு பயங்கரவாதி மற்றும் நடுகல் பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
டாக்டர் பரமநாதன் விக்கினேஸ்வரா அவர்களின் ஓராண்டு நினைவாக அவரது குடும்பத்தினர் தீபச்செல்வன் எழுதிய நூல்களை வடக்கு கிழக்கு நூலகங்களுக்கு அன்பளிப்பு செய்து வருகின்றனர்.
அதன் மற்றொரு கட்டமாகவே மட்டக்களப்பு பேத்தாலை நூலகத்திற்கு மேற்குறித்த நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
“எமது வாசகர் நா.தஜிதரனின் ஊடாக பேத்தாழை பொது நூலகத்திற்கு இரு நூல்களை அன்பளிப்புச் செய்த நூல் ஆசிரியர் தீபச்செல்வன் அவர்களுக்கு விபுலானந்தர் வாசகர் வட்டத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என பேத்தாலை நூலகத்தின் முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.