Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் புலம்பெயர் நாடுகளெங்கும் கூத்து மீளுருவாக்கம்

புலம்பெயர் நாடுகளெங்கும் கூத்து மீளுருவாக்கம்

1 minutes read

 

பிரான்ஸ் ஒன்லி சுபா நகரில் இயங்கும் தமிழ்ப் பாடசாலை தனது 25 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.இந்த விழாவில் ஈழத் தமிழர்களின் தொல் கலையான கூத்தின் நீட்சி இன்னியமாய் எழில் கொள்ளும் அதேவேளை ஈழநாட்டியமும் அரங்கேறுகிறது.
நம் மரபை தம் கால்களிலும் எண்ணங்களிலும் நம் தொல்சீர் கலை என்கிற பெருமிதத்துடன் கொண்டாடுகின்றனர்

இன்னிய, ஈழ நாட்டியப் பயிற்சியில் பெருமளவில் ஆண்கள் பெண்கள் என கலந்து கொண்டு ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

ஒரு சிறு பொறி நம் கலை மரபின் உயிர்ப்பை உலகமெங்கும் கொண்டு சேர்க்கும் .கூத்து மீளுருவாக்கம் பேராசிரியர் வித்தியானந்தன் தொடங்கி இன்று பேராசிரியர்.சி.மெளனகுரு அவர் மாணவர்கள் எங்கள் வழியாய் உலகம் முழுவதும் நம் உயர் கலையை பேசும் .

கூத்து மீளுருவாக்க செல்நெறி நேர்கொண்ட பார்வையில் திரிபுகள் அற்று உண்மைக் கலைமரபாய் காலத்தின் மாற்றங்களை மனம் கொண்டு தன்னைத் தகவமைத்துக் கொண்டு நீள்கிறது.

இன்றைய இன்னிய ஈழநாட்டிய பயிற்சிகள்,எதிர்கால நம்பிக்கையை நம் முன் கொண்டு வந்து சிறக்கிறது.

-பாலசுகுமார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More