ஈழத்தின் மூத்த ஊடகவியலாளரும் தமிழ் ஆய்வாளரும் ரொரன்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபூரோ வளாகத்தின் விரிவுரையாளருமான பொன்னையா விவேகானந்தனின் நான்கு நூல்களின் அறிமுக விழா இன்று லண்டனில் இடம் பெற உள்ளது.
வணக்கம் லண்டன் இணையதளத்தில் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வணக்கம் லண்டன் மற்றும் கிளி பீப்பிள் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெறுகிறது.
பல்வேறு ஆளுமைகள் பங்கு பற்றி கருத்துரைகளை வழங்கும் இந்த நிகழ்வுக்கு லண்டனைச் சேர்ந்த பல்வேறு புலம்பெயர் அமைப்புகள் அனுசரணை வழங்குகின்றது குறிப்பிடத்தக்கது.