Monday, May 13, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் ஏங்கியது மனம்: கவிதா

ஏங்கியது மனம்: கவிதா

1 minutes read

******************
தாயின் கருவறையில்
கண்ட சுகத்தை
தரணியில் தேடுகிறேன்

தவழும் வயதில்
தாயை தேடுவேன்
ஒழிந்துகொண்டு
கண்ணாமூச்சி
விளையாட்டு
காட்டுவாள்

தாலாட்டிய அவள் குரலும்
தலை கோதிய அவள்
விரல்களும்
தலையனையாய் கொடுத்த
தாய் மடியும்
எங்கே என தேடிடுகிறேன்

துள்ளித் திரிந்தபோது
அள்ளி அணைத்தாள்
தட்டிவிட்டுச்
தள்ளிச் சென்றேன்
தவித்து நின்றாள்

உறவுகள் உதறியபோது
உயிறானவள் நீயென
உணர்ந்தேன்
விழிநீர் சொறிந்து
கண்ணங்களில்
உப்பாக
உறைந்து போக
உயிரும் துடிக்க
உயிரானவள்
உன்னை மீண்டும்
காண ஏங்கித் தவிக்கிறேன்

கவிதா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More