Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கிளிநொச்சி கந்தன் பவனி | கேசுதன்

கிளிநொச்சி கந்தன் பவனி | கேசுதன்

1 minutes read

தொடுவானம் மேவிடும் போது
உன் திருவடி பணிந்தேன் தெய்வமே
ஓரார் ஒளியெழுப்பி உன் உன்னத மரபிசை உணர்ந்தோம்
பூவண்ணம் புடைசூழ அரோகரா கவச ஒலியுடன் தொண்டர் உன் திருவடி பின்தொடர
ஓங்கிய உன்பெயரும் காதுகள் கிழிக்கவே
ஒப்பில்லா உன் திருவடி தங்கிய தேரும் உருண்டோடியது
வடங்களும் வடதிசை நோக்க தென்திசை
உன் தெம்மாங்கும் வான்முழங்க அரோகரா கரகோசமுடன் ஆடிஅசைந்து வரும் உன் திருவடியை
பணியவே பலகூட்டம் பால் செம்பும் பறவை காவடியும்
உன்திருவடி வணங்கி செல்லும் அழகுதான் என்னவோ!
கிளிநகர் எங்கும் உன்திருநாமம் சொல்லியே பூரிக்கும்
புன்னகை சிந்தும் உன் முகம் காண வரார் எவருண்டு
எள்ளி நகையாடும் உன்னழகும் அழகுக்கு மெருகேற்றும்
நாதஸ்வரமும் பவனிவர கந்தவேல் முருகனின் படை வீரம் பேசும் ஒரு குழுமம் .
ஒற்றிய கை தலைமேல் பற்றியே ஒரு குழுமம் புடைசூழ
ஓங்கார ஒலியுடன் கந்தவேல் பெருமான் தன் நகர்வலம்
நிறைவேற்றினான்.

கேசுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More