Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நிலவும் மரமும் | சக்தி

நிலவும் மரமும் | சக்தி

1 minutes read

இரவு நேரம்
வானத்து நிலவை
தாங்கிக்கொண்டிருக்கிறது
மரம்
பகல் நேரத்தில் கால்பந்து
விளையாட்டை
விளையாடிக்கொள்வதற்காக,

தூக்கமில்லாமல்
அலைந்து கொண்டிருந்த
நிலவை
பகலில் துயில் கொள்ள
வைப்பதற்காக
பிடித்து வைத்திருக்கிறது மரம் ,

ஊரையெல்லாம்
சுற்றி திரியும்
நிலாவை பிடித்து வைத்து
பேசிக்கொண்டிருக்கிறது மரம் ,

மேலிருந்து விழுந்த
நிலவை தன் கிளைகளால்
தாங்கிக்கொண்டு
தாலாட்டுப்பாடலைப்
பாடிக்கொண்டிருக்கிறது மரம் ,

கூடுகள் இல்லாமல்
அலைந்து கொண்டிருக்கும்
குருவிகளுக்காக
கூடொன்றை ஏற்படுத்தி
வைத்திருக்கிறது நிலவை தாங்கிக் கொண்டிருக்கும் மரம் ,

நிலத்து காவலுக்கு
சென்ற விவசாயின்
பசியை போக்க
தோசையொன்றை திருடி
வைத்திருக்கிறது மரம் ,

அழகு பெருமாள் குப்பம் சக்தி,
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம்,

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More