2
உயிர்
தொண்டையை
அடைக்க
நீர் வேண்டுமென கேட்கிறார்கள்
தனக்கென
வைத்திருந்த நீரை
தாராளமாக தான் ஊற்றுகிறார்கள்
நாங்கள்
தாகம் நிறைந்ததென
ஊரெல்லாம் ததும்புகிறோம்
தண்ணீரில்
மஞ்சள் நிற வெயிலை போர்த்திக்கொண்டவாறு
கையறுத்து
நிற்கிறது உலக நீல வானம் ,
கவிஞர் ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,