Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் தினமும் காலையில் குங்குமப்பூ நீர் குடித்தால் இத்தனை நன்மைகளா…?

தினமும் காலையில் குங்குமப்பூ நீர் குடித்தால் இத்தனை நன்மைகளா…?

3 minutes read
நமது பூமியில் உள்ள ஒவ்வொரு ஜீவ ராசிகளும் பல வகையான மகத்துவங்களை கொண்டது. சிறிய புல் முதல் பெரிய மரம் வரை எண்ணற்ற பலன்களை நமக்கு தருகிறது. அந்த வகையிலே சற்றே விலை கூடிய இந்த குங்குமப்பூவை நீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் பலவித மாயாஜாலங்கள் நடக்குமாம். அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
குங்குமப்பூ 
இந்த குங்குமப்பூவில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்களும், தாதுப் பொருட்களும் உள்ளன. இதில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்  இருப்பதால் உடல் வலிமையை அதிகரிக்கச் செய்யும்.
காலையில் தினமும் குடிக்கலாமா?
சிறிது குங்குமப்பூ கலந்த நீரை காலையில் தினமும் வெறும் வயிற்றில் குடித்து வருவதே உகந்தது. 1 கப் மிதமான சுடு நீரில் 20 மி.கி  முதல் 30 மி.கி வரை குங்குமப்பூ கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 2 வார காலம் குடித்து வந்தால் பின்வரும் நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.
முடி உதிர்வா…?
15 நாட்கள் தொடர்ந்து குங்குமப்பூ கலந்த நீரை குடித்து வந்தால் உடலில் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அதில் முக்கியமானது உங்களின் முடி உதிர்வு குறைவதே. முடி அதிகமாக உதிரும் பிரச்சினை இருப்பவர்களுக்கு 10 நாட்களுக்குள்ளே இந்த குங்குமப்பூ நீர், முடி சார்ந்த பிரச்சினையை குணப்படுத்தி விடுமாம்.
புற்றுநோயை தடுக்கும்…
நீங்கள் குங்குமப்பூ நீரைக் குடித்தால் புற்றுநோய் செல்கள் உங்களின் உடலில் உருவாகாதபடி இவை பார்த்துக் கொள்ளும்.
ஏனெனில் இதில் உள்ள crocin என்கிற மூலப் பொருள் செல்களை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள உதவும். மேலும் ரத்த சோகை, குடல் பிரச்சினைகள் போன்றவையும் குணமாகும்.
பளீச்சென்ற சருமம்..
நீங்கள் தொடர்ந்து 15 நாட்கள் இந்த குங்குமப்பூ நீரைக் குடித்து  வந்தால், நிச்சயமாக உங்களின் முகம் இரு மடங்காக பொலிவு பெறுமாம். அத்துடன் சரும வறட்சி, சொரசொரப்பு, கருமை ஆகியவை நீங்கி பளீச்சென்ற அழகை தர கூடிய ஆற்றல் பெற்றது இந்த மகத்துவ நீர்.
இரட்டிப்பான மூளை..
15 நாட்கள் குங்குமப்பூ நீர் குடித்து வந்தால் மூளையின் வேலைப்பாடு அதிகரிக்க செய்யும். குறிப்பாக ஞாபக மறதி கொண்டவர்களுக்கு இந்த குங்குமப்பூ நீர் பலனளிக்கும். மேலும், அதிக நேரம் வேலையில் கவனம் செலுத்தவும், சுறுசுறுப்பாக இருக்கவும் இந்த நீர் உதவும்.
ஆரோக்கியமான இதயம்..
குங்குமப்பூவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளதால் இதயத்திற்கு அதிக ஆரோக்கியத்தை தரும். குறிப்பாக ரத்த நாளங்கள், தந்துகிகள் ஆகியவற்றை சீராக வேலை செய்யும்படி பார்த்துக் கொள்ளும். மேலும், உடலில் உள்ள கொலஸ்ட்ராலையும் இது குறைக்க கூடும்.
செரிமான கோளாறுகளுக்கு..
அஜீரண கோளாறு இருப்பவர்கள் இந்த குங்குமப்பூ நீரை குடித்து வந்தால் எளிதில் குணமடையும். அத்துடன் குடலில் உள்ள புண்கள், வீக்கங்கள் ஆகியவற்றையும் இந்த நீர் சரி செய்து விடும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More