Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் உங்களினுக்கு தெரியுமா ??மனவலிமை கூட்டும் தாமரை.

உங்களினுக்கு தெரியுமா ??மனவலிமை கூட்டும் தாமரை.

1 minutes read

தாமரை, ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. செந்தாமரை, வெண்தாமரை என இருவகை தாமரை மலர்கள் இருந்தாலும், மருத்துவத்தில் வெண்தாமரையே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

மூளை வளர்ச்சி
உடல் ஆரோக்கியத்துக்கு வெண்தாமரைக் குடிநீர் மிகவும் ஏற்றது. மூன்று வாரங்களுக்குத் தொடர்ந்து வெண்தாமரை பூ கஷாயம் குடித்துவந்தால் மூளை வளர்ச்சியடையும். இதயம் தொடர்புடைய எண்ணற்ற நோய்களைப் போக்க வெண்தாமரை பூ கஷாயம் ஏற்றது. தினம் மூன்று வேளை வெண்தாமரை பூ கஷாயம் சாப்பிட மனநோய் குணமாகும்.

பார்வைத் தெளிவு
வெண்தாமரை பூ, இலை, தண்டு, கிழங்கு ஆகியவற்றைத் தலா 100 கிராம் எடுத்து, அவற்றை நன்றாகச் சாறு பிழிந்து முக்கால் கிலோ நல்லெண்ணெயில் கலந்து அடுப்பில் கொதிக்கவைக்கவும். நன்றாகக் கொதித்த உடன் அதை இறக்கி ஆறவைத்து, காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைக்கவும். தினமும் இதைத் தலைக்குத் தேய்த்து ஊறவைத்துக் குளித்துவந்தால், மனம் தெளிவடையும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More